உள்ளூர் செய்திகள்
பள்ளியை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்
செங்கல்பட்டு அருகே பள்ளிக் கட்டிடத்தை இரவோடு இரவாக மர்ம நபர்கள் சிலர் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு:
மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். கட்டிடத்தில் இருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.