உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் கள்ள ஓட்டு போடுவதாக அ.தி.மு.க.வினர் புகார்
கிருஷ்ணகிரியில் கள்ள ஓட்டு போடுவதாக அ.தி.மு.க.வினர் புகார் அளித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 1 மற்றும் 2வது வார்டுக்கு கிருஷ்ணகிரி நகராட்சி உருதுநடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில்,1-வது வார்டில், 1,950 ஓட்டுகளும், 2-வது வார்டில், 2,652 ஓட்டுகளும் உள்ளன. இதில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இருப்பதாலும், வார்டு மறுவரையறை செய்யப்பட்டபின், 3-வது வார்டின், 1,300 பேரை, 2-வது வார்டில் சேர்த்ததாலும், வாக்காளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2வது வார்டில் ஓட்டளிக்க சென்ற இருவரின் ஓட்டுகள் ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அ.தி.மு.க.,வினர் அளித்த தகவல்படி கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நேரில் வந்து விசாரித்தார். அவரிடம் அக்கட்சியினர், பெண்கள் சிலர் கள்ள ஓட்டு போடுவதாகவும், ஓட்டு சாவடி பக்கவாட்டு பகுதி வழியாக சென்று மீண்டும் மீண்டும் ஓட்டளிப்பதாக அவரிடம் புகார் தெரிவித்தனர்.
மேலும் ஓட்டுசாவடி பக்கவாட்டில் உள்ள பாதையை தகர சீட் கொண்டு அ.தி.மு.க.,வினரே அடைக்க முயன்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதை ஏற்காத அசோக்குமார் எம்.எல்.ஏ., அதிகாரிகள் தங்கள் பணிகளை நேர்மையாக செய்ய வேண்டும் இல்லையென்றால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என கூறி சென்றார்.
பின்னர் அங்கிருந்தவர்களை கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 1 மற்றும் 2வது வார்டுக்கு கிருஷ்ணகிரி நகராட்சி உருதுநடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில்,1-வது வார்டில், 1,950 ஓட்டுகளும், 2-வது வார்டில், 2,652 ஓட்டுகளும் உள்ளன. இதில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இருப்பதாலும், வார்டு மறுவரையறை செய்யப்பட்டபின், 3-வது வார்டின், 1,300 பேரை, 2-வது வார்டில் சேர்த்ததாலும், வாக்காளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2வது வார்டில் ஓட்டளிக்க சென்ற இருவரின் ஓட்டுகள் ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அ.தி.மு.க.,வினர் அளித்த தகவல்படி கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நேரில் வந்து விசாரித்தார். அவரிடம் அக்கட்சியினர், பெண்கள் சிலர் கள்ள ஓட்டு போடுவதாகவும், ஓட்டு சாவடி பக்கவாட்டு பகுதி வழியாக சென்று மீண்டும் மீண்டும் ஓட்டளிப்பதாக அவரிடம் புகார் தெரிவித்தனர்.
மேலும் ஓட்டுசாவடி பக்கவாட்டில் உள்ள பாதையை தகர சீட் கொண்டு அ.தி.மு.க.,வினரே அடைக்க முயன்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதை ஏற்காத அசோக்குமார் எம்.எல்.ஏ., அதிகாரிகள் தங்கள் பணிகளை நேர்மையாக செய்ய வேண்டும் இல்லையென்றால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என கூறி சென்றார்.
பின்னர் அங்கிருந்தவர்களை கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.