உள்ளூர் செய்திகள்
.

காய்கறி வியாபாரி தற்கொலை

Published On 2022-02-19 15:57 IST   |   Update On 2022-02-19 15:57:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே கடன் தொல்லை காரணமாக காய்கறி விபாயாரி தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள சூடாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது42). காய்கறி வியாபாரி. இந்த நிலையில் இவர் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளார். இதனால் அந்த கடனை திருப்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நாகராஜ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News