உள்ளூர் செய்திகள்
கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அலகுபாவி என்ற இடத்தில் 2 லாரிகள் மோதிய கொண்ட விபத்தில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி கவிழ்ந்தது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலை அலகுபாவி அருகே ஒசூர் இருந்து சேலம் நோக்கி 2 லாரிகள் சென்று கொண்டிருந்தது.
இந்த லாரிகளில் டிரைவர்கள் போட்டி போட்டு முந்த முயன்றனர். அப்போது லாரிகள் ஒன்றன் பின் ஒன்று எதிர் பாராதவிதமாக மோதியது.
இதில் லாரிகள் மோதி கொண்டதில் பின்னர் வந்த ஒரு கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக சாலை நடுவே திடீரென கவிழ்ந்தது. இதில் 2 லாரி டிரைவர்கள் உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் ஒசூர்&கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பெரும் பாதித்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து வந்து கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய லாரிகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.