உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கர்ப்பிணி சாவு

Published On 2022-02-19 14:07 IST   |   Update On 2022-02-19 14:07:00 IST
கர்ப்பிணி இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் மெயின்ரோட்டு தெருவைச் சேர்ந்த ராமசாமியின் மகள் கனகவல்லி(வயது 29). இவருக்கும் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன்(32) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கனகவல்லி சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தந்தை வீட்டிற்கு வந்த கனகவல்லி, ஒரு மாத்திரைக்கு பதிலாக 84 மாத்திரைகளை தின்றதாக கூறப்படுகிறது. 

இதனால் மயங்கிய அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News