உள்ளூர் செய்திகள்
அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் - நாளை தொடங்குகின்றன.
அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.
அரியலூர்:
அரியலூர் ராஜேஷ் ஐ.ஏ.எஸ். அகடாமியில் 15,000 அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) 2022 ஆம் ஆண்டு 15 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உத்தேச கால அட்டவணை வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 5,800 பணியி டங்கள் குரூப்-2ஏ தேர்வு மூலமாகவும், 5255 பணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளது.
மாணவர்களை இத்தேர்வுக்கு சிறப்பாக தயார்படுத்தும் வகையில் கடந்த 7ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களை உருவாக்கிய அரியலூர் மற்றும் பொய்யூரில் செயல்பட்டு வரும் ராஜேஷ் ஐ.ஏ.எஸ். அகடாமியில் 16 ஆண்டுகள் கல்வித் துறையில் அனுபவம் பெற்றவரான ராஜேஷால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தினசரி வகுப்பு வார இறுதி வகுப்பு மற்றும் மாலை நேரடி வகுப்பு ஆகியவை நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் நடத்தப்படுகிறது. நாளை (20-ந்தேதி) அறிமுக வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ளவர்கள் 90951 06081 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 2000 கட்டணச் சலுகை வழங்கப்படும். இந்த பயிற்சி அரியலூர் துர்கா ஸ்டோர் இரண்டாவது தளத்தில் வைத்து நடைபெறும். ஏற்கனவே பொய்யூரில் காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு விடுதி வசதியுடன் நடைபெற்று வருகிறது.