உள்ளூர் செய்திகள்
சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் தங்க நெருப்பு பந்து போல் உதித்த சூரிய உதயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் தங்க நெருப்பு பந்து போல் சூரியன் உதித்ததால் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கற்று வட்டாரங் களில் கடந்த சில வாரங்களாக ஜனவரி, பிப்ரவரி மாதம் வந்தாலே வெயில் அதிகரிக்கும். பனி பொழிவு காணாமல் போகும். ஆனால் சில வாரங்களாக இரவு மற்றும் அதிகாலையில் பனி பொழிவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சூரியன் காலை 6- மணிக்கே உதயமாகி பணிகளை விரட்டி அடிக்க உதயமாகும் தோற்றம் இன்று காலை 6-30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை நடுவே தங்க நெருப்பு பந்து போல் சூரியன் உதித்து காணப்பட்டது.
இதனை அந்த வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் வியப்புடன் பார்த்து செல்போனில் படம் பிடித்தனர்.