உள்ளூர் செய்திகள்
.

கேட்பாரற்று கிடந்த 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2022-02-17 15:54 IST   |   Update On 2022-02-17 15:54:00 IST
கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் 1.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே கேட்பாரற்று கிடந்த 1.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்க்கள் தென்னரசு, கோபிநாத் மற்றும் போலீஸ் ஈஸ்வரன் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி-வேப்பனபள்ளி சாலையில் உள்ள குந்தாரப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். 

அப்போது அங்கு 24 மூட்டைகளில் 50 கிலோ அளவிலான 1,200 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து அந்த அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News