உள்ளூர் செய்திகள்
.

மத்தூர் அருகே வாலிபர் மாயம்

Published On 2022-02-17 15:29 IST   |   Update On 2022-02-17 15:29:00 IST
திருப்பத்தூர் மாவட்டம், காக்கனாம்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், காக்கனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது24). இவரது மனைவி வெற்றிசெல்வி (24). காதல் திருமணம் செய்த இந்த தம்பதிகள் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மூக்காகவுண்டர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு நடந்தது-.

இதனால் மனமுடைந்து காணப்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெகதீஸ் வெகுநேரமாகியும் வீடு திரும் பில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து வெற்றிசெல்வி மத்தூர் போலீசில் புகார்  கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து மாயமான ஜெகதீசை தேடி வருகிறார்.

Similar News