உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் மணிமாறன் (வயது 25). மீனவர்.
இவர் இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வடபகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் பின்புறம் இருக்கும் கடற்கரையில் இறந்து கிடந்தார்.
முகம் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. முகத்தை சிதைத்து மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மீனவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு கொலை நடந்த இடத்தில் 5-க்கும் மேற்பட்டோர் கும்பலாக இருந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மணிமாறனுடன் சென்ற நண்பர்கள் யார், யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.