உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பதட்டமான வாக்குச்சாவடிகள்: மாமல்லபுரத்தில் போலீஸ் ஐ.ஜி சந்தோஷ்குமார் ஆலோசனை

Published On 2022-02-09 14:06 IST   |   Update On 2022-02-09 14:06:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளின் பதற்றமான ஓட்டு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு குறித்து, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

மாமல்லபுரம்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுகுன்றம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளின் பதற்றமான ஓட்டு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு குறித்து, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

போலீஸ் ஐ.ஜி., சந்தோஷ் குமார், டி.ஐ.ஜி., சத்தியபிரியா, செங்கல்பட்டு எஸ்.பி., அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளை கணக்கெடுத்து அவைகளை கூடுதலாக கண்காணிப்பது, அப்பகுதியில் ஜாதி, மத மோதல்கள் நடந்துள்ளதா என ஆய்வு செய்வது, லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருப்போர் விபரங்களை சேகரிப்பது, வன்முறை நடந்தால் அதை பரவாமல் கட்டுப்படுத்துவது எப்படி, வன்முறை செய்வோர்கள் மீது கட்சி பாகுபாடு இன்றி வழக்கு பதிவு செய்வது போன்ற முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Similar News