உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி
மாமல்லபுரம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பவழக்காரன் சத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் லட்சுமணபதி வயது.23, தனது நண்பர் செல்வகுமாருடன் நேற்று பூஞ்சேரி டோல்கேட் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்பகுதில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பைக்கை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து பைக் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது., இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமணபதி உயிரிழந்தார்.
உடன் சென்ற செல்வகுமார் காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.