உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தற்கொலை

Published On 2022-02-03 11:42 IST   |   Update On 2022-02-03 11:42:00 IST
ரெட்டியார்பாளையத்தில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி: 

புதுவை ரெட்டியார்பாளையம் ஆரூத்ராநகர் முதல் தெருவை சேர்ந்தவர் பழனிராஜா (வயது 29) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு திருமணமாகி 1 ¾ ஆணடு ஆகிறது. 

இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. ஜெயபாரதி தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். பழனி ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பழனிராஜா வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி ஜெயபாரதி கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த பழனிராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்கில் தொங்கினார். உடனே அவரது மனைவி ஜெயபாரதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  பழனிராஜா பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மனைவி ஜெயபாரதி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News