உள்ளூர் செய்திகள்
புதுவை பஸ் நிலையத்தில் எலி மருந்து தின்று தற்கொலை செய்த திருவண்ணாமலை வாலிபர்
தந்தை இறந்த துக்கத்தில் புதுவை பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை வாலிபர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குருவிமலை கிராமத்தை சேர்ந்தவர் சேட் (வயது50). இவரது மகன் ராஜ்குமார்(27). கடந்த 20-ந் தேதி சேட் திடீரென தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து எலி மருந்து தின்று விட்டார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 30-ந்தேதி இறந்து விட்டார். அவரது உடல் அடக்கம் 31-ந் தேதி நடந்தது.
தந்தை தற்கொலை செய்து கொண்டதால் மனவேதனையடைந்த ராஜ்குமார் அன்றிரவு அங்கிருந்து பஸ் மூலம் புதுவைக்கு வந்தார்.
புதுவை பஸ் நிலையத்தில் திடீரென ராஜ்குமார் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டது போல் அவரும் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மயங்கி கிடந்த அவரிடம் உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி அவரது உறவினரை வரவழைத்தனர்.
இதையடுத்து உறவினர்கள் ராஜ்குமாரை சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ராஜ்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
ராஜ்குமார் புதுவை பஸ் நிலையத்தில் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் இதுகுறித்து அவரது உறவினர் பாக்கியராஜ் புதுவை உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குருவிமலை கிராமத்தை சேர்ந்தவர் சேட் (வயது50). இவரது மகன் ராஜ்குமார்(27). கடந்த 20-ந் தேதி சேட் திடீரென தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து எலி மருந்து தின்று விட்டார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 30-ந்தேதி இறந்து விட்டார். அவரது உடல் அடக்கம் 31-ந் தேதி நடந்தது.
தந்தை தற்கொலை செய்து கொண்டதால் மனவேதனையடைந்த ராஜ்குமார் அன்றிரவு அங்கிருந்து பஸ் மூலம் புதுவைக்கு வந்தார்.
புதுவை பஸ் நிலையத்தில் திடீரென ராஜ்குமார் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டது போல் அவரும் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மயங்கி கிடந்த அவரிடம் உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி அவரது உறவினரை வரவழைத்தனர்.
இதையடுத்து உறவினர்கள் ராஜ்குமாரை சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ராஜ்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
ராஜ்குமார் புதுவை பஸ் நிலையத்தில் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் இதுகுறித்து அவரது உறவினர் பாக்கியராஜ் புதுவை உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.