உள்ளூர் செய்திகள்
தற்கொலை

மாமல்லபுரம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

Published On 2022-02-02 12:02 IST   |   Update On 2022-02-02 12:02:00 IST
மாமல்லபுரம் அருகே கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த மணமை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). கல்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். 3 மாதமாக தவணை தொகை கட்டாததால் பைனான்ஸ் நிறுவனத்தினர் சதீஷ் குமாருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் சதீஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News