உள்ளூர் செய்திகள்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 9 பேர் கைது- இலங்கை கடற்படை அதிரடி
புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்டுத்தர வேண்டுமென்றே காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால்:
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல், கடந்த 29-ந்தேதி காரைக்கால் கோட்டுச்சேரி மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கு சொந்தமான படகில் 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இலங்கை அருகே இந்திய எல்லையில் இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் 9 மீனவர்களையும் படகையும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகில் காரைக்காலை சேர்ந்த எழில் மற்றும் கலைச்செல்வன் உட்பட 9 மீனவர்கள் உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் மீனவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்டுத்தர வேண்டுமென்றே காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல், கடந்த 29-ந்தேதி காரைக்கால் கோட்டுச்சேரி மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கு சொந்தமான படகில் 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இலங்கை அருகே இந்திய எல்லையில் இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் 9 மீனவர்களையும் படகையும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகில் காரைக்காலை சேர்ந்த எழில் மற்றும் கலைச்செல்வன் உட்பட 9 மீனவர்கள் உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் மீனவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்டுத்தர வேண்டுமென்றே காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.