உள்ளூர் செய்திகள்
மொழியியல் பண்பாட்டு அரங்கில் நாடக விழா-அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்
மொழியியல் பண்பாட்டு அரங்கில் நாடக விழாவை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறை, தஞ்சைத் தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் நிகழ்க் கலைத்துறை ஆகியவை இணைந்து நிகழ் நிலை நாடக விழா வருகிற 6-ந் தேதி வரை நடத்துகின்றன.
இதன் தொடக்க விழா லாஸ்பேட்டையில் அமைந்துள்ள புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது. அமைச்சர் சந்திர பிரியங்கா நாடக விழாவை தொடங்கி வைத்தார்.
வைத்திநாதன் எம்.எல்.ஏ., கலை, பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், கலை, பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பேராசிரியர் பிரகதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாழ் வாதாரம் இழந்து நலிந்த நிலையில் உள்ள நாடக கஞைர்களுக்கு உதவிடும் வகையில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட 31 நாடகக் குழுக்கள், புதுவை பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்களுக்கு 3 நாடகங்கள் தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையம் சார்பில் 1 நாடக குழு என 35 குழுக்களுக்கு விழாவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக விழாவை முழுமையாக வீடியோ பதிவு செய்து தஞ்சை தென்னகப் பண்பாட்டு மைய முகநூல் வழியாக ஒளிபரப்பப்படுகிறது.
இன்று(பிப்ரவரி 1) முதல் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 7 நாட்கள் நாள்தோறும் 5 நாடகங்கள் வீதம் நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு கலைக் குழுவிற்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் 35 குழுக்களுக்கும் 10லு லட்சம் வழங்கப்பட உள்ளது.
அதோடு இந்திய அரசு கலாச்சார அமைச்சகத்தின் முகநூல் பக்கத்திலும் இந்த நாடகங்கள் பதிவேடு செய்யப்பட இருப்பதால் புதுவை கலைஞர்களின் திறமை உலகளவில் வெளிப்படும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.