உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,430 பேர் பாதிப்பு

Published On 2022-02-01 08:59 IST   |   Update On 2022-02-01 08:59:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 13,547 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,430 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 694 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 524 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,623 ஆக உயர்ந்துள்ளது. 13,547 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்து 667 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 86 ஆயிரத்து 198 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சைப் பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,287 ஆக உயர்ந்துள்ளது. 4,182 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News