உள்ளூர் செய்திகள்
விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-31 14:13 IST   |   Update On 2022-01-31 14:13:00 IST
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

புதுவை விவசாயிகள் சங்கம் சார்பில் அண்ணா சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன், ரவி தலைமை வகித்தனர். நிர்வாகிகள் மாசிலாமணி, ராஜா, கலியமூர்த்தி, பெருமாள், தாமோதரன், கருணாகரன் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார். காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் செல்வகணபதி, தி.மு.க. விவசாயிகள் பிரிவு தலைவர் செந்தில்குமார், கம்யூனிஸ்டு (எம்.எல்.) விவசாய பிரிவு புருஷோத்தமன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் செல்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவுதமிழ்வளவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை செயல்படுத்த வில்லை. விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறவில்லை. உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை பற்றி தீர்மானிக்க அமைக்கப்பட்ட குழுவோடு அரசு பேச்சு வார்த்தையை தொடர வில்லை. 

விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த நிகழ்வில் மத்திய அமைச்சருக்கும் தொடர்பு உண்டு என்று விசாரணை அறிக்கை வந்த பிறகும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் உள்ள பிரதமர் மோடியின் செயலை கண்டிக்கும் வகையில் ஜனவரி 31 துரோக தினமாக கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Similar News