உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய உரிமையாளர் கைது-6அழகிகள் மீட்பு

Published On 2022-01-30 11:05 IST   |   Update On 2022-01-30 11:05:00 IST
புதுவை காமராஜர் சாலையில் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்து 6 அழகிகளை மீட்டனர்.
புதுச்சேரி:

புதுவை சாரம் காமராஜர் சாலையில் தனியார் அழகு நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த அழகு நிலையத்துக்கு இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் அடிக்கடி வந்து சென்றனர்.

இதனால் அங்கு விபசாரம் நடக்கலாம் என அப்பகுதி மக்கள் கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சப்&இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜன் சிறப்பு அதிரடிப்படை போலீசாருடன் சென்று அழகு நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு அறையில் 6 இளம் பெண்கள் தங்கியிருந்தனர். மேலும் அந்த அறையில் காண்டம் இருந்தது. 

இதையடுத்து அந்த பெண் களிடம் விசாரணை நடத்திய போது அவர்களை அழகு நிலைய உரிமையாளரான வாணரப்பேட்டையை சேர்ந்த ராஜா(வயது28) என்பவர் விபசாரத்தில் ஈடு படுத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 அழகிகளையும் மீட்டு மூலக்குளத்தில் உள்ள காப்பக இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Similar News