உள்ளூர் செய்திகள்
காரைக்கால் அம்பகரத்தூரில், வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில், வாய்க்காலில் தவறி விழுந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி பலியானாது குறித்து, திருநள்ளாறு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் தலையாரித்தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் கனகராஜ்(வயது37). கூலிவேலை செய்துவரும் இவர், நேற்று முன்தினம் மாலை, அம்பகரத்தூர் கல்லடி வாடிவாய்க்கால் கரை ஓரம் நடந்து சென்றபோது, கால்தவறி வாய்க்காலில் விழுந்துள்ளார். வாய்க்காலில் தண்ணீரில் இருந்ததால், மூச்சுதினறி மயங்கியுள்ளார்.
இது குறித்து, அப்பகுதியைச்சேர்ந்தகண்ணதாசன், திருநள்லாறு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, கனகராஜை அங்குள்ளோர் உதவியுடன், அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிசென்றனார். மேல் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கனகராஜ் கொண்டுச்செல்லப்பட்டார். அங்கு கனகராஜ் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, திருநள்ளாறு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.