உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஒரகடம் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2022-01-29 17:07 IST   |   Update On 2022-01-29 17:07:00 IST
ஒரகடம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:

ஜம்மு காஷ்மீர் பில்லாவர் கதுவா பகுதியை சேர்ந்தவர் தாராசந் (வயது 49). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் பகுதியில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீ‌ட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் மின்விசிறிக்கான கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாராசந் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News