உள்ளூர் செய்திகள்
மருத்துவ கல்வியில் உள்ஒதுக்கீடு வழங்க சட்டசபையை கூட்ட வேண்டும் அன்பழகன் வலியுறுத்தல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உள்ஒதுக்கீடு வழங்க சட்டசபையை கூட்ட வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக கவர்னர் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கையினால் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் பிரதமரால் ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்பட்டது சாதனை என்றும் அனைத்து மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக மருத்துவ கல்வி ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அதற்கான சட்டத் தையும் கொண்டு வந்து முந்தைய அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியதையும் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.
இதற்காக தமிழக கவர்னருக்கு புதுவை அ.தி.மு.க. சார்பில் நன்றி யையும் பாராட்டு தலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் போன்று புதுவையில் உள்ஒதுக்கீடு வழங்கினால் அரசு பள்ளியில் பயிலும் 26 மாணவர்கள் மருத்துவ கல்வி பயில வாய்ப்புகள் கிடைக்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-அமைச்சர் ரங்கசாமி உண்மை நிலையை உணர்ந்து தமிழக உள் ஒதுக்கீடு சட்டத்தை பின்பற்றி புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கையை இந்த கல்வி ஆண்டில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அதற்கான சட்டத்தை கொண்டு வர சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி முதல்&அமைச்சர் ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.