உள்ளூர் செய்திகள்
ஆசிரியர்

ஆசிரியர் பணியில் சேர தகுதிகள் என்ன?- புதிய அரசாணை வெளியீடு

Published On 2022-01-29 03:18 GMT   |   Update On 2022-01-29 03:18 GMT
புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழக பாடத்திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது.
புதுச்சேரி:

புதுவை அரசில் ஆசிரியர் பணிக்கு மத்திய அரசு நடத்தும் சிடெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கல்வித்துறை கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. தற்போது புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழக பாடத்திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி வெற்றிபெற்ற புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆசிரியர்கள் தேர்வு என்பது போட்டி எழுத்து தேர்வு அடிப்படையிலேயே இருக்கும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News