உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் உயிரிழக்கும் அபாயம்

Published On 2022-01-29 02:53 GMT   |   Update On 2022-01-29 02:53 GMT
கொரோனாவுக்கு பலியாகி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களே என்பது தெரியவந்துள்ளது. ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தியவர்களாக இருந்தாலும் அவர்கள் இணை நோய் காரணமாக உயிரிழப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்து தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும் கொரோனாவுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் தடுப்பூசி போடாதவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தான் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

தடுப்பூசி போட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனாவுக்கு பலியாகி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களே என்பது தெரியவந்துள்ளது.

ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தியவர்களாக இருந்தாலும் அவர்கள் இணை நோய் காரணமாக உயிரிழப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே தேவையாக உள்ளது.
Tags:    

Similar News