உள்ளூர் செய்திகள்
தாம்பரம் மாநகராட்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 277 வார்டுகள்

Published On 2022-01-28 16:17 IST   |   Update On 2022-01-28 16:17:00 IST
தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளன. இதில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 731 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியும், நந்திவரம், செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் ஆகிய 4 நகராட்சிகளும், மாமல்லபுரம், திருப்போரூர், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், இடைக்கழி நாடு ஆகிய 6 பேரூராட்சிகளும் உள்ளன.

தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளன. இதில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 731 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நந்திவரம் நகராட்சியில் 30 வார்டுகள், செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள், மறைமலை நகர் நகராட்சியில் 21 வார்டுகள், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் என மொத்தம் 108 வார்டுகள் உள்ளன.

இந்த 4 நகராட்சிகளிலும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர். மாமல்லபுரம், திருப்போரூர், கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளும், திருக்கழுக்குன்றனம் பேரூராட்சியில் 18 வார்டுகளும் உள்ளன. இடைக்கழி நாடு பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த 6 பேரூராட்சிகளிலும் மொத்தம் 91 ஆயிரத்து 618 வாக்காளர்கள் உள்ளனர். ஆக மொத்தம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 277 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 லட்சத்து 76 ஆயிரத்து 762 வாக்காளர்கள் ஓட்டுபோட உள்ளனர்.தேர்தலுக்காக 1067 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 8 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Similar News