உள்ளூர் செய்திகள்
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

மத்திய அரசை கண்டித்து தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-27 08:38 GMT   |   Update On 2022-01-27 08:38 GMT
மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

குடியரசு தின விழாவில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழகத்தை சேர்ந்த, பாரதி, மருது சகோதரர்கள், மற்றும் வேலுநாச்சியார்,வ.உ.சி உள்ளிட்டவர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் அமைக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இந்த அலங்கார ஊர்திகள் ஊர்திகள் குடியரசு தின விழாவில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை கண்டித்து புதுவை திராவிட விடுதலைக் கழகம் சார்பில் புதுவை சுதேசி பஞ்சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

மாநில தலைவர் சிவ வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் லெனின் இட்ஸ் பாலசுப்பிரமணியன் ம.தி.மு.க. கபிரியேல், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
Tags:    

Similar News