உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு

Published On 2022-01-27 03:45 GMT   |   Update On 2022-01-27 03:45 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,883 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 757-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,597- ஆக உயர்ந்துள்ளது. 16,589 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 545 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 85 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 82 ஆயிரத்து 894 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை 1,283 பேர் உயிரிழந்துள்ளனர். 4,908 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News