உள்ளூர் செய்திகள்
சட்டசபையில் ரங்கசாமி கொடியேற்றினார்
புதுவை சட்டசபையில் ரங்கசாமி தேசிய கொடியேற்றி மரியாதை செய்தார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சட்ட சபை வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்றினார்.
நிகழ்ச்சியில் சபா நாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ரங்கசாமி ஏற்றுக்கொண்டார்.