உள்ளூர் செய்திகள்
FIEL PHOTO

விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம்

Published On 2022-01-21 07:05 GMT   |   Update On 2022-01-21 07:05 GMT
விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:&

கிணறுகளிலிருந்து பாசனத்திற்கு நீரினை இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் தொலை நோக்கு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு  விவசாயிகளுக்கு, பாசன நீரை இறைத்திட புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார்           பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்தவும், விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ. 10 ஆயிரம்  மானியம் வழங்கப்படும்.

எனவே, விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற சிறு,குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள நிலவரை படம், மின்சார இணைப்பு அட்டைவிபரம் மற்றும் வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகலுடன், இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் , வேளாண்மைப் பொறியியல் துறை, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை  அலுவலகத்திலும், அறந்தாங்கி கோட் டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல்துறை, ராஜேந்திரபுரம், அறந்தாங்கி உபகோட்டத்திலும் மனுக்கள் அளித்து பதிவு செய்து பயன் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News