உள்ளூர் செய்திகள்
பெண்களை பாட்டுபாடி கிண்டல் செய்த வாலிபர் கைது
திருக்கனூர் அருகே பெண்களை பாட்டுபாடி கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே சந்தைபுதுக்குப்பம்&மயிலம் பாதை சந்திப்பில் 19-&ந் தேதி மாலை ஒரு வாலிபர் நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் இளம்பெண்களை பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் சந்தைபுதுக்குப்பம் காலனி ஒத்தவாடை வீதியை சேர்ந்த முத்துலிங்கம்(வயது28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.