உள்ளூர் செய்திகள்
காரைக்கால் அருகே விபத்து- அக்காள்-தங்கை உள்பட 4 பேர் காயம்
காரைக்கால் அருகே நடந்த விபத்தில் அக்காள்-தங்கை உள்பட 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே உள்ள குரும்பகரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு திவ்யா(வயது26), அபிநயா(21) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இதில் திவ்யா தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திவ்யா மற்றும் அவரது தங்கை அபிநயா ஆகியேர் மொபட்டில் காரைக்கால் நோக்கி சென்றனர். காரைக்கால் அருகே உள்ள காஞ்சிபுரம் கோவில்பத்து பகுதியில் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ்(20), மதன்(19) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக திவ்யாவின் மொபட் மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் அருகே உள்ள குரும்பகரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு திவ்யா(வயது26), அபிநயா(21) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இதில் திவ்யா தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திவ்யா மற்றும் அவரது தங்கை அபிநயா ஆகியேர் மொபட்டில் காரைக்கால் நோக்கி சென்றனர். காரைக்கால் அருகே உள்ள காஞ்சிபுரம் கோவில்பத்து பகுதியில் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ்(20), மதன்(19) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக திவ்யாவின் மொபட் மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.