உள்ளூர் செய்திகள்
தற்கொலை

மறைமலைநகர் அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2022-01-19 11:07 GMT   |   Update On 2022-01-19 11:07 GMT
மறைமலைநகர் அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

சென்னை புதுப்பேட்டை பச்சையப்பா முதலி தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது44). ஆட்டோ டிரைவர். இவரது மகள்கள் ஐஸ்வர்யா (5), பூஜா (3).

கடந்த 15-ந்தேதி காலை ஞானவேல் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து ஞானவேலின் மனைவி ஜெயந்தி எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மறைமலைநகர் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் 3 பேர் பிணமாக கிடப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில் பிணமாக மீட்கப்பட்டது மாயமான ஞானவேல், அவரது மகள் ஐஸ்வர்யா, பூஜா என்பது தெரிந்தது. 3 பேரும் துணியால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.

மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஞானவேல் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News