உள்ளூர் செய்திகள்
புதுவையில் ஐ.டி.ஐ. நிறுவனங்களுக்கும் 31-ந்தேதி வரை விடுமுறை
புதுவையில் ஐ.டி.ஐ. நிறுவனங்களுக்கும் 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:-
புதுவையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதையொட்டி புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களுக்கு (ஐ.டி.ஐ.) விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை நடத்தினார். இதன்பின் பள்ளிகள் போலவே ஐ.டி.ஐ. நிறுவனங்களுக்கும் வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவித்துள்ளார்.