உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

Published On 2022-01-18 08:07 GMT   |   Update On 2022-01-18 08:07 GMT
புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அரசியல் கட்சியினர் அப்செட் ஆகியுள்ளனர்.
புதுக்கோட்டை: 


புதுக்கோட்டை நகராட்சி உட்பட 58 நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கபட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட அனைத்து கட்சியினரும் உரிய நடவடிக்கை எடுத்து வந்தனர். 

குறிப்பாக ஆளும் தி.மு.க. கட்சி சார்பாக வடக்கு மாவட்ட பொருளாளர் செந்தில், நகரச் செயலாளர் நைனாமுகமது, முன்னாள் நகரச் செயலாளர் அரு.வீரமணி, முன்னாள் கவுன்சிலர் லியாகத்அலி உள்ளிட்டோர் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர். 

இதே போல் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் தலைவர் சேட் என்கிற அப்துல்ரகுமான், ராஜசேகர் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தனர். 

இந்தநிலையில் புதுக்கோட்டை உட்பட 58 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட் ஆகியுள்ளனர். 

இருப்பினும் கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளனர். இதற்கிடையே துணை தலைவர் பதவிக்கு பெரிய அளவில் போட்டி நிலவும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. 

தி.மு.க. சார்பாக முன்னாள் தலைவர் மணிமேகலை ராஜேந்திரன் உட்பட சிலர் பெயர்கள் முன்னிருத்தபடுகின்றன.
Tags:    

Similar News