உள்ளூர் செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்.

சீர்காழி ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு

Published On 2022-01-10 09:25 GMT   |   Update On 2022-01-10 09:25 GMT
சீர்காழி ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
சீர்காழி:

தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், முழுகரும்பு உள்ளிட்ட துணிப்பையுடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. 

சீர்காழி வட்டாரத்தில் 97ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி சீர்காழி தென்பாதியில் உள்ள ரேசன் கடை, சட்டநாதபுரம் 
அங்காடி ஆகியவற்றில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை சீர்காழி குடிமைபொருள் வட்ட வழங்கல் வட்டாட்சியர் சபிதாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய சபிதாதேவி, குடும்ப அட்டைதாரர்கள் அரசின் பொங்கல்பரிசுதொகுப்பை சமூக இடைவெளியுடன், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ளலாம். 

முழுமையாக அனைத்து கார்டுதாரர்களுக்கும் விடுபடாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றார்.
Tags:    

Similar News