உள்ளூர் செய்திகள்
கைது

தாயில்பட்டி அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2021-12-28 18:00 IST   |   Update On 2021-12-28 18:00:00 IST
தாயில்பட்டி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:

பெட்டிக்கடைகளில் மது விற்பனை செய்வதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி சல்வார் பட்டி பகுதிகளில் உள்ள கடையில் சோதனை நடத்தினர். அப்போது நமச்சிவாயம் (வயது 52) என்பவரிடம் விற்பனைக்கு வைத்திருந்த 10 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரவார்பட்டியில் குருவைய்யா (42) என்பவரிடம் விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Similar News