உள்ளூர் செய்திகள்
கைது

சிவகாசியில் கணவரை பிரிந்த பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

Published On 2021-12-23 11:11 GMT   |   Update On 2021-12-23 11:11 GMT
சிவகாசியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:

சிவகாசி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருராஜ். இவரது மனைவி சித்ராதேவி (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சித்ராதேவி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

அப்போது வின்சென்ட் என்பவர் குடும்ப நண்பராக சித்ராதேவியிடம் பழகியுள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.10 லட்சம் வரை பணத்தை பறித்துள்ளார்.

தற்போது அவர் திருமணத்திற்கு மறுத்தததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் சித்ராதேவி புகார் செய்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வின்சென்ட் கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News