உள்ளூர் செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி அருகே குட்கா விற்ற 12 பேர் கைது

Published On 2021-12-14 15:57 IST   |   Update On 2021-12-14 15:57:00 IST
கிருஷ்ணகிரி அருகே குட்கா விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்டி கடைகளில் குட்கா விற்கப்படுகிறதா? என போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது குட்கா விற்ற மத்திகிரி மஞ்சுநாத் (வயது 19), பென்னிகல் ராஜகோபால் (39), ஒட்டர்பாளையம் வெங்கடசாமி (42) உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,500 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News