உள்ளூர் செய்திகள்
கைது

புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது

Published On 2021-12-13 08:58 GMT   |   Update On 2021-12-13 08:58 GMT
புகையிலை பொருட்கள் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டத்தில் உள்ள பெட்டி கடைகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக கொரல்நத்தம் நாகராஜ் (வயது53), யானைக்கால்தொட்டி அண்ணாமலை (61), பிள்ளையார் கோவிலூர் கார்த்திகேயன் (40), உளிவீரனஅள்ளி சிவக்குமார் ராய் (23), ஓசூர் என்.ஜி.ஓ. காலனி ஆனந்த் தேவ்நாத் (40), தபால்மேடு கோவிந்தராஜ் (55), பாறையூர் பழனி (42) அகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News