உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 19 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 19 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது புகையிலை பொருட்களை விற்பனை செய்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 775 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.5 ஆயிரத்து 500 ஆகும்.