உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2021-12-08 18:26 GMT   |   Update On 2021-12-08 18:26 GMT
பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

கந்திகுப்பம் அருகே உள்ள சிந்தகம்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் பர்கூர்- பசவண்ண கோவில் சாலையில் மேல்கொட்டாய் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் நடந்து சென்ற சீனிவாசன் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த சீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சீனிவாசன் இறந்து விட்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News