உள்ளூர் செய்திகள்
டெங்கு காய்ச்சல்

கிருஷ்ணகிரியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

Published On 2021-12-07 10:59 GMT   |   Update On 2021-12-07 10:59 GMT
குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தண்ணீர் தேங்காமலும் தண்ணீர் தொட்டிகளை சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு பாதிப்பை காட்டிலும், இந்த ஆண்டு பாதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 40 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்காமலும், கொசுப்புழுக்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News