உள்ளூர் செய்திகள்
கைது

கந்திகுப்பம் அருகே முதியவரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2021-12-06 10:10 GMT   |   Update On 2021-12-06 10:10 GMT
கந்திகுப்பம் அருகே முதியவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

கந்திகுப்பம் குரும்பர் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது75). அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (33) உறவினர்கள். இவர்களுக்குள் நில தகராறு இருந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் துரைசாமியை கிருஷ்ணன் தரப்பினர் தாக்கினார்கள். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி, கிருஷ்ணன் (33), சீதாராமன் (51) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News