உள்ளூர் செய்திகள்
திருட்டு

கிருஷ்ணகிரி பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Published On 2021-12-06 09:08 GMT   |   Update On 2021-12-06 09:08 GMT
கிருஷ்ணகிரி பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா பெத்தனப்பள்ளி அருகே உள்ள வேட்டியம்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 30). இவர் கிட்டம்பட்டி இந்தியன் வங்கி முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். அதே போல கிருஷ்ணகிரி பழையபேட்டை மதர்சாய்பு தெருவை சேர்ந்தவர் அப்துல் சத்தார் (28) தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணகிரி போலீசில் புகார் செய்தனர். இதேபோல ராமாபுரம் திருமலை நகரை சேர்ந்தவர் இளவரசன் (35). இவர் பந்தாரப்பள்ளி அருகே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து இளவரசன் குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில் கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த சண்முக சுந்தரம் (50) என்பவர் இந்த 3 மோட்டார்சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News