உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

போச்சம்பள்ளி அருகே சூதாடிய 4 பேர் மீது வழக்கு

Published On 2021-12-06 14:32 IST   |   Update On 2021-12-06 14:32:00 IST
போச்சம்பள்ளி அருகே சூதாடிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள வலசை கவுண்டனூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ராமமூர்த்தி, வேடியப்பன், சரவணன், ஞானவேல் ஆகியோர் போலீசாரை கண்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அங்கிருந்த 7 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News