உள்ளூர் செய்திகள்
வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானைகள் முகாம்: விவசாயிகள்-பொதுமக்கள் பீதி
காட்டு யானைகள் மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு வந்துள்ளதால் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்களும் விவசாயிகளும் பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தமிழக எல்லையில் கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் மீண்டும் 8 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையில் இருந்து வந்த ஒற்றையானை 2 வரை கொன்ற சம்பவத்தை அடுத்து காட்டு யானைகள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டி அடிக்கப்பட்டது.
தற்போது இந்த யானைகள் மீண்டும் தமிழக எல்லையான கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகளை தமிழக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் துரத்தி அடித்து வருகின்றனர்.
அப்போது 2 குழுக்களாக காட்டுயானைகள் பிரிந்து உள்ளதால் வனத்துறையினர் யானைகளை விரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுயானைகளை துரத்த 10-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் யானைகளை கண்காணித்து துரத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகிறனர்.
காட்டுயானைகள் இருவரை கொன்ற சம்பவத்திற்கு பிறகு மீண்டும் காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்கு வந்துள்ளதால் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்களும் விவசாயிகளும் பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தமிழக எல்லையில் கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் மீண்டும் 8 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையில் இருந்து வந்த ஒற்றையானை 2 வரை கொன்ற சம்பவத்தை அடுத்து காட்டு யானைகள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டி அடிக்கப்பட்டது.
தற்போது இந்த யானைகள் மீண்டும் தமிழக எல்லையான கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகளை தமிழக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் துரத்தி அடித்து வருகின்றனர்.
அப்போது 2 குழுக்களாக காட்டுயானைகள் பிரிந்து உள்ளதால் வனத்துறையினர் யானைகளை விரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுயானைகளை துரத்த 10-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் யானைகளை கண்காணித்து துரத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகிறனர்.
காட்டுயானைகள் இருவரை கொன்ற சம்பவத்திற்கு பிறகு மீண்டும் காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்கு வந்துள்ளதால் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்களும் விவசாயிகளும் பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.