உள்ளூர் செய்திகள்
சீமான்

தி.மு.க. அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி 12ந்தேதி ஆர்ப்பாட்டம்- சீமான் அறிவிப்பு

Published On 2021-12-04 10:15 GMT   |   Update On 2021-12-04 10:15 GMT
தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 12-ந்தேதி வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை மதத்தினை காரணமாக காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள தி.மு.க. அரசின் மதவாதப்போக்கை கண்டித்தும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய 161-வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவு கொடுத்திருக்கும் தி.மு.க. அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்தும் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்து பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News