உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2021-12-03 10:10 GMT   |   Update On 2021-12-03 10:10 GMT
ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூரில் தின்னூர் அம்மன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ரேகா (வயது 30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ரேகா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரேகாவுக்கு திருமணம் ஆகி 6½ ஆண்டுகள் ஆவதால் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News