செய்திகள்
திருட்டு

நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Published On 2021-11-30 06:27 GMT   |   Update On 2021-11-30 06:27 GMT
நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:

நெய்வேலி 29-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் மணிமாறன் மகன் ஜோயல்(வயது 24). இவர் என்.எல்.சி.யில் பழகுனர் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று இவர், பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த ரூ.1,500 மதிப்புள்ள மின்சார அடுப்பை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்சார அடுப்பை திருடியது 30-வது வட்டத்தை சேர்ந்த எட்வின் மனோகர் மகன் ஆரோக்கிய ராஜ்(28), 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆரோக்கியராஜ் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவன் கடலூர் சிறார் சீர்திருத்த பள்ளிக்கும், ஆரோக்கியராஜ் கடலூர் மத்திய சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News